Trending Topic

We bring you Articles, Poems, Stories, Inspirational Quotes and Speeches
Showing posts with label Speeches. Show all posts
Showing posts with label Speeches. Show all posts

Monday, October 14, 2024

இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் இணைய மோசடிகள்


இணையத்தளம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 120 சீனப் பிரஜைகள் அடங்கிய குழுவொன்றைக் கடந்த வார இறுதியில் பொலிஸார் கைது செய்தனர். கண்டி, குண்டசாலையில் அமைந்துள்ள 47 அறைகள் கொண்ட சொகுசு பங்களா ஒன்றை சந்தேக நபர்கள் இந்த இணைய மோசடிக்குப் பயன்படுத்தியுள்ளனர். கைது செய்யப்பட்ட சீனப் பிரஜைகளிடம் இருந்த 15 கணினிகள் மற்றும் 300 கைடயக்கத் தொலைபேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. இவ்வாறு இந்த வார ஆரம்பத்தில் ஹங்வெல்ல, நாவல, மற்றும் பாணந்துறை ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 80 வெளிநாட்டுப் பிரஜைகள் இணைய மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே போன்று இதற்கு முன்னரும் நீர்கொழுப்பு

Wednesday, October 9, 2024

புதியதோர் அரசியல் கலாச்சாரத்தின் தேவைக்கான அறைகூவல்...

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கட்டளைப்படி கடந்த செப்டம்பர் 24 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய ஒன்பதாவது பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. இந்தப் பாராளுமன்றம் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் திகதி ஆரம்பமாகி 2024 செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி நள்ளிரவு வரை 390 நாட்கள் கூடியிருந்தன. ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்து வருட காலம் இன்னும் நிறைவடையவில்லை என்றாலும், அரசியலமைப்பின் 70 ஆம் உறுப்புரையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய பாராளுமன்றத்தைக் கலைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் கூடி இரண்டரை வருடங்களின் பின்னர் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

 
அதற்கமைய பத்தாவது பாராளுமன்றத்துக்கான மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் பொதுத் தேர்தல் எதிர்வரும் நவம்பர்

Monday, September 2, 2024

நேர்காணல்: இணையப் பாதுகாப்பு ஏன் அவசியம்?

தொழில்நுட்ப வளர்ச்சியினால் இன்றைய உலகில் இணையத்தின் ஆதிக்கமே வியாபித்துக் காணப்படுகின்றது. இணையத்தின் ஊடாக பல நன்மையான விடயங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் கூட, அதே அளவிற்கு தீமையான விடயங்களை மேற்கொள்வதற்கும் இணையம் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது. வேலைவாய்ப்புக்கள், கல்வி, தொலைதொடர்பு, தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு, வணிகம் என்று அன்றாடத் தேவைகள் இன்று இணையத்திலேயே தங்கியுள்ளன. அதனால், இணையப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு வழங்க வேண்டியதன் தேவை காணப்படுகின்றது. 

எனவே, காலத்தின் தேவைக்கு இந்த விடயங்களை வாசகர்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் இலங்கைப் பாராளுமன்றத்தில் ஊடக அதிகாரியாகக் கடமையாற்றும் நுஸ்கி முக்தார் அவர்களை நேர்காணல் செய்தோம். அதனை கேள்வி பதிலாக தருகின்றோம்.

Thursday, August 15, 2024

உங்கள் வாக்கைத் தீர்மானிக்கும் சமூக ஊடகப் பிரச்சார உத்திகள் மற்றும் கட்டமைப்பு பற்றிய புரிதல் தேவை

இலங்கையின் அடுத்த ஐந்து ஆண்டுகளை ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி எதிர்வரும் செப்டம்பர் 21 என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில் இன்று 15 ஆம் திகதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படுவதற்கு பல மாதங்களுக்கு முன்பிருந்தே வேட்பாளர்கள் தமது பிரச்சார நடவடிக்கைகளை முடக்கி விட்டிருந்தனர். இதில் குறிப்பாக சமூக ஊடகங்களின் மூலம் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் முக்கிய இடத்தை பிடிக்கின்றது. இலங்கையின் சனத்தொகையில் 50% அதிகமானவர்கள் இணையத்தளத்தை பயன்படுத்துவதை தரவுகள் மூலம் காணக்கூடியதாக உள்ளது. அதிலும் விஷேடமாக 34.2 வீதமானவர்கள் சமூக ஊடக பயனர்களாக உள்ளதாக இவ்வருட ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. அந்த அடிப்படையில் சமூக ஊடகங்களின் பயனர்களை இலக்காகக் கொண்ட தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றமை காணக்கூடியதாக உள்ளது. 

Thursday, July 11, 2024

அதிகரிக்கும் இணையவழி மோசடிகள் - அவதானம் தேவை


குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் நிதி விசாரணைப் பிரிவுக்கு பெண் ஒருவர் அண்மையில் முறைப்பாடொன்றை மேற்கொண்டிருந்தார். அது அறிமுகமில்லாத நபர் ஒருவர் தன்னை வட்ஸப் குழுவொன்றில் இணைத்து, டிக்டொக் வீடியோக்களுக்கு லைக் மற்றும் கமெண்ட் போடுவதன் மூலம் பணம் ஈட்ட முடியும் எனத் தெரிவித்து, பின்னர் அதனை விட அதிக பணம் ஈட்டுவதற்கு முடியும் எனத் தெரிவித்து வங்கிக் கணக்கொன்றுக்கு பணம் வைப்பிலிட்ட சம்பவம் தொடர்பானதாகும். அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து தந்தையும் மகனொருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர்களும் குறித்த நிதி மோசடியில் சிக்கிக்கொண்டு பாதிக்கப்பட்டவர்கள் என்பது மேலதிக விசாரணைகளில் தெரியவந்தது. அதன்படி, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு 200 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் இலங்கையர்களும் வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். அத்துடன்,

Saturday, March 28, 2020

COVID 19 இனால் ஏற்படக்கூடிய உளவியல்சார் சவால்கள்

COVID 19 என்றால் என்ன?  

COVID 19 என அழைக்கப்படும் ஒரு வகையான வைரஸ் நோயை கண்டு உலகமே அதிர்ந்து போயுள்ளது. உயிரைக் கொள்ளும் இந்த கொரோனா தொற்று நோய் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவிலிருந்து ஆரம்பித்து இன்று சுமார் 180 ற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இன்றைய நாள் (26.03.2020) புள்ளிவிபரங்களின் படி உலகம் பூராகவும் இந்நோயினால் 462, 684 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் அத்துடன் 20, 834 இற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர் (உலக சுகாதார நிறுவனம்). இந்நிலைமை மேலும் மோசமடையக் கூடும் என சில கணிப்புகளும் எதிர்வுகூறல்களும் குறிப்பிடுகின்றன. இந்நோயின் தீவிரத்தையும் அது உலகளாவியரீதியல் மிக விரைவாகப் பரவுவதையும் கண்ட உலக நாடுகள் தமது நாடுகளில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி வருகின்றன. ஏனெனில் இந்நோய்கான தடுப்பு மருந்துகள் இது வரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவே வரும் முன் காப்பதே இதற்கான சிறந்தவொரு கட்டுப்பாட்டு வழிமுறை என அண்மைய அனுபவங்கள் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன.

Friday, March 13, 2020

பாராளுமன்றத்தின் பணிகளை செய்யக்கூடிய சரியான மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வோம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைப்படி, பாராளுமன்றத்தை கலைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவின் கையொப்பத்துடன் கடந்த 02 ஆம் திகதி வெளியானது. 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கி 2015 செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி ஆரம்பமான 08 வது பாராளுமன்றத்தின் ஐந்து வருட கால எல்லை இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடையவிருந்தது.
எனினும் 19 வது அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கு அமைய பாராளுமன்றம் கூடி நான்கரை வருடங்களின் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய 09 வது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களை தெரிவுசெய்யும் பொதுத்தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதற்கான வேட்புமனுக்களை மார்ச் மாதம் 12 ஆம் திகதியிலிருந்து 19 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை தாக்கல் செய்ய முடியும். அதன்படி புதிய பாராளுமன்றம் மே மாதம் 14 ஆம் திகதி கூடவுள்ளது.

Wednesday, January 30, 2019

படுபிடியவுக்கு ஒரு சட்ட யாப்பு அவசியமா?


கடந்த வருட இறுதியில் இலங்கையில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடி நிலைமை பற்றி அனைவரும் அறிந்ததே. இதன்போது சர்வாதிகாரமான முறையிலும் மனம்போன போன போக்கிலும் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் எவ்வாறு நீதியின் முன்னிலையில் தூக்கி வீசப்பட்டது என்பதை கண்கூடாக கண்டோம். குறித்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் நீதியை வேண்டி நின்றவர்களுக்கும் சட்டத்தை நிலைநாட்டும் நிறுவங்களுக்கும் உறுதுணையாக காணப்பட்டது இலங்கை ஜனநயாக சோஷலிச குடியரசின் அரசியல் யாப்பு ஒன்று மாத்திரமே. யாப்பு ஒன்று எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்துவதற்கு, எதேச்சாதிகாரம் தோற்கடிக்கப்பட்ட, எமது தலைமுறைக்கு பரீட்சயமான கிட்டிய உதாரணமாக இதனை குறிப்பிடலாம். 

Friday, December 7, 2018

போதைப்பொருள் ஒரு பொது எதிரி



தினசரி பத்திரிகையை புரட்டும் போதோ அல்லது தொலைக்காட்சியை திருப்பும் போதோ அடிக்கடி கேட்கும் ஒரு செய்தியாக போதைப்பொருள் விவகாரத்துடன் தொடர்புபட்ட விடயங்களை இன்று சுட்டிக்காட்ட முடியும். முன்பு நகர்ப் புறங்களில் மாத்திரம் காணப்பட்ட இந்த போதைப்பொருள் பாவனை தற்பொழுது குக்கிராமங்களுக்கும் வியாபித்துள்ளமை ஆச்சரியமான ஒரு விடயமாகும். சில வேளைகளில் மிகவும் பின்தங்கிய கிராமங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வந்தடைவதில் தாமதமேற்பட்டாலும் போதைப்பொருள் வந்தடைந்திருக்கும். சமய மற்றும் சமூக விழுமியங்களைப் பேணிவந்த ஊர்களும் இந்த போதைப்பொருள் தொல்லையால் பல சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றன.

Monday, December 18, 2017

பிற மதத்தினரையும் கவரும் முப்தி மென்கின் உரைகள் | Mufti Menk Sri Lanka Visit - 2017


பிரபல சர்வதேச இஸ்லாமிய போதகரும், உளவளத்துணையாளருமான முஃப்தி இஸ்மாயில் மென்க் கடந்த வாரம் இலங்கைக்கும் விஜயம் செய்திருந்தார். கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் முஃப்தி மென்க் இலங்கையில் வந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றி வருகின்றார். இம்முறை யூனிட்டி டுவர் (Unity Tour) எனும் தொனிப்பொருளில் அவரது விஜயம் அமைந்திருந்தது.


முஃப்தி மென்க் பற்றி…
முஃப்தி இஸ்மாயில் மென்க் சிம்பாபே நாட்டில் பிறந்து வளர்ந்த ஒரு இஸ்லாமிய அறிஞர். மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் ஷரீஆ துறையில் பட்டப்படிப்பை நிறைவேற்றியுள்ள இவர் அல்டர்ஸ்கேட் பல்கலைக்கழகத்தில் சமூக வழிகாட்டல் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றுள்ளார்.

Tuesday, September 29, 2015

Oxford பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர், கலாநிதி தாரிக் ரமழானுடன் செவ்வி


01. கேள்வி: பல்லின மக்கள் வாழும் இலங்கையில் சிறுபான்மை சமூகமாக வாழும் முஸ்லிம்கள், பெரும்பான்மை சமூகத்துடன் மற்றைய ஏனைய சமூகங்களுடன் ஒன்றிணைந்து வாழ்வது எப்படி?
பதில்: ஒன்றிணைந்து வாழ்தல் என்ற சொற்பிரயோகத்தில் ஒரு குழப்பநிலை காணப்படுவதாகவே நான் நினைகின்றேன். நீங்கள் அனைவரும் இலங்கையின் பிரஜைகள். இது உங்களுடைய நாடு. மத ரீதியாக சிறுபான்மையினராக இருந்தாலும் இது உங்கள் நாடு. இலங்கை கலாசாரத்திற்குள் வாழும் நீங்கள் இலங்கை முஸ்லிம்கள்.
பரந்த இலங்கைக்குள் ஒன்றிணைத்து வாழ்தல் போன்று கருத்துப்பட எப்பொழுதும் பேசுவதன் மூலம் இது உமது சமூகமில்லை, இது பெரும்பன்மையினரின் சமூகம் மாத்திரம் என்ற உணர்வை எற்படுத்துகின்றது. ஆனால் இந்த சமூகம் அனைவரினதும். அனைவரும் நாட்டின் சமஉரிமை கொண்ட பிரஜைகள். இவ்வாறே இது அமைய வேண்டும் என நான் நினைக்கின்றேன்.
02. கேள்வி: பல்லின சமூகத்தில் வாழும் போது முஸ்லிம்களின் அடையாளத்தை பேணி வாழ்வது சவால்மிக்கது. ஒன்றிணைந்து வாழும் போது எவ்வாறான அடையாளங்களை விட்டுகொடுக்க முடியும் எவ்வாறான அடையாளங்களை விட்டுகொடுக்க முடியாது?
பதில்: நாம் ஒன்றிணைத்து வாழ்தல் மற்றும் எமது அடையாளங்களை பேணுதல் என்ற பத பிரயோகத்தையே சவாலாக கொள்ள வேண்டும். இங்கு முக்கிய விடயம் என்னவென்றால் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகள் என்ன என்பதனை அறிந்துகொள்ள வேண்டும்.

Wednesday, March 25, 2015

நாட்டின் அபிவிருத்தியில் சமூகப் பணிக் கல்வியின் பங்கு இன்றியமையாதது

ஒரு நாட்டின் அபிவிருத்தி வெறுமனே பௌதீக வளங்களின் அவிவிருத்தியால் மாத்திரம் இடம்பெற முடியாது. மாறாக அவிபிருத்தி பூரணப்பட வேண்டுமானால் ஒப்பீட்டடிப்படையில் மனித வளங்களின் அபிவிருத்தியும் ஏற்பட வேண்டும். இவ்வாறான பௌதீக வளம் மற்றும் மனித வளம் உட்பட்ட சமூக அபிவிருத்தியை கொண்டே ஒரு நாட்டின் அபிவிருத்தியை அளவிட முடியும்.
அபிவிருத்தியை இலக்காக கொண்டு எந்தளவு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டாலும் அதன் பூரண பயனை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அபிவிருத்தி என்பது மக்களின் உண்மையான தேவையாக மாறவேண்டும். மேலும் இடம்பெறும் அபிவிருத்தி திட்டங்கள் மீது அதன் பயனர்களின் மற்றும் நாட்டு மக்களின் நம்பிக்கை ஏற்படவேண்டும். சாதக மனப்பாங்கு ஏற்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் அபிவிருத்தியின் பிரதிபலன்களை மக்களை சென்றடையச் செய்து நாட்டில் சமூக அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும்.

சமூக அபிவிருத்தியை ஏற்படுத்துவதில் சமூகப்பணியின் பங்களிப்பு மிக அவசியமான ஒன்றாக தற்பொழுது உலகம் பூராகவும் கருதப்படுகின்றது. அபிவிருத்தி அடைந்த நாடுகளை நோக்கும் போது அவற்றின் அபிவிருத்தியில் சமூகப் பணியின் பங்கு முக்கிய இடம்பிடித்திருப்பதை கண்டுகொள்ளக் கூடியதாகவுள்ளது. எமது நாட்டைப் பொருத்தவரையிலும் சமூகப் பணியின் அவசியம் அதிகரித்துச் செல்வதை உணரக்கூடியதாகவுள்ளது.

Thursday, November 13, 2014

Muslims Never Supported Separatism or Terrorism - M.M. Zuhair, President’s Counsel

Naleem Hadjiar Memorial Oration

SLMC weaned away Muslim youth joining LTTE post July 83



M.M. Zuhair, PC delivers the Naleem Hadjiar Memorial Oration 


Tamil tigers would have achieved ‘Eelam’ within the first 15 years of the 1975 killing of Jaffna Mayor Alfred Duraiyappah, if Mohammed Hussain Mohammed Ashraff from the East did not form the Sri Lanka Muslim Congress and wean away the eastern Muslim youth, who frustrated with national parties, were at that time joining the LTTE in numbers following the July 83 riots. Sri Lankans should not forget that the Muslim community never supported terrorism or the division of the country and it was the LTTE’s failure to get Muslim backing that led to the Muslims being driven out of the North in 1980 and getting massacred in their hundreds in the East. This failure was a major blow to the LTTE.

Monday, August 25, 2014

Civic and Political Participation of Youth

UNDP Sri Lanka starts a conversation on 'Civic and Political Participation of Youth'

Join the conversation in the Facebook page...





Wednesday, May 28, 2014

An inspirational speech by Dr. Abdul Kalam

India's former president Dr. APJ Abdul Kalam quotes a 3000 years old Tamil poem.

On an inspirational speech he delivered to the European Parliament at Strasbourg, France in April 2007.

In his speech he stresses the point that the universal peace begins with the single heart by quoting the words from the old Tamil literature.

Where there is righteousness in the heart 
there is beauty in the character, 
When there is beauty in the character 
there is harmony in the home, 
When there is harmony in the home
 there is order in the nation, 
When there is order in the nation
there is peace in the world.




Friday, May 16, 2014

Racism No Answer to Racism - Anurakumara Dissanayake

Leader of Janatha Vimukthi Peramuna (JVP) speaks on 'Challenges facing National unity' at the Founder's Day Ceremony of ACUMLY held in Colombo on  Monday 12th May 2014





Monday, November 11, 2013

Commonwealth Youth Forum opening ceremony: Commonwealth Secretary-General's speech

10 November 2013
Speaker: Commonwealth Secretary-General Kamalesh Sharma / Location: International Convention Centre, Hambantota
Your Excellency, Honourable Ministers, distinguished guests, youth delegates, Commonwealth friends…
There can no better way of launching our great Commonwealth gathering and festival for 2013 in Sri Lanka this week than to join you here in Hambantota for this celebration to open the Commonwealth Youth Forum.
I thank our hosts, the government and people of Sri Lanka, for the generosity and warmth of welcome we have received. I applaud all who have worked so hard to deliver this Forum, and those of you who have travelled many thousands of miles from across the Commonwealth to be here.
The energy and optimism of youth raises our ambition for what we can achieve together as a global family and gives us confidence that we can shape the future. It is by including all, with respect and understanding for diversity, and unity forged from shared goals, that the true Commonwealth spirit is advanced. The theme for this Forum puts it well: ‘Inclusive Development: Stronger Together’.
In the fast-moving and closely-connected world of today the contribution of young people to national development and the values of our societies, and the development of the Commonwealth globally, is pivotal.
Young people have never before had such ability and opportunity as this generation enjoys of communicating easily and instantly with fellow youth worldwide.

Monday, August 19, 2013

Politicians should stop representing religions - Bakeer Markar

Former minister Imtiaz Bakeer Markar requests to stop representing religion from politicians 



Imtiaz Bakeer Markar


Sunday, July 28, 2013

Role of Muslims in Nurturing National Unity

N.M. Ameen
An important part of the Medina society were recognized as a distinct, autonomous Respected religious leaders, distinguished guests and everyone present for this National Conference today, first let me greet you all by saying Assalamu Alaikum, Ayubowan, Wannakam and Good Evening. It is indeed my pleasure to be at this august assembly and share some thoughts with you on the role of Religion in reconciliation from a Muslim perspective.

Distinguished Guests, I think we can all agree that the most important task today for us in Sri Lanka is to work on reconciliation – create an atmosphere for peaceful living among all communities, and create mutual trust through the establishment of social justice. Truthfully speaking, communal disharmony by any means in society is an awful social disease, religion can play a vital role in combating this disease.

Majority of people in Sri Lanka who belong to the four major religions followed in our motherland do fortunately, adhere to the noble teachings of their respective religions. This is a positive sign for us. As the speaker representing the religion of Islam, I would like to present the Islamic viewpoint with regard to creating an atmosphere of peaceful co-existence through reconciliation.