இவை இலங்கை பிரஜைகளை மாத்திரம் இலக்காகக் கொண்டு இயங்கும் தளங்கள் அல்ல, மாறாக இந்த நவீன மோசடி மையங்கள் சர்வதேச ரீதியாகப் பலரை ஏமாற்றுவதைத் தொழிலாகக் கொண்டு இயங்குகின்றன.
Space for Meaningful Discussions on Everything from Politics to Technology, Social Issues and Youth
Thursday, May 7, 2026
இலங்கையைச் சூழ்ந்துள்ள சர்வதேச இணைய மோசடிகள்! நமது பாதுகாப்பு நமது கையில்...
Monday, April 27, 2026
2.5 மில்லியன் டொலர் மோசடியும் நாம் கற்க வேண்டிய பாடங்களும்...
இலங்கையின் நிதித்துறை அண்மையில் ஒரு பாரிய டிஜிட்டல் அதிர்வை எதிர்கொண்டது. அவுஸ்திரேலிய ஏற்றுமதி நிதி முகவர் நிறுவனத்திற்கு (Australian Export Finance Agency) செலுத்தப்பட வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, திட்டமிட்ட முறையில் இணையக் கொள்ளையர்களால் திசைதிருப்பப்பட்டுள்ளது. நாட்டின் கடன் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார மீட்சி குறித்து சர்வதேச அளவில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் இவ்வேளையில், இச்சம்பவம் நமது 'இறைமை சார்ந்த நம்பகத்தன்மைக்கு' (Sovereign Credibility) விடுக்கப்பட்ட நேரடி சவாலாகும்.
நிதி அமைச்சுக்கும் அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்கும் இடையிலான மின்னஞ்சல் தொடர்புகளை இடைமறித்த ஹேக்கர்கள், வங்கிக் கணக்கு விபரங்களை மிக நுட்பமாக மாற்றி இந்த கொள்ளையை அரங்கேற்றியுள்ளதாக தற்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ள தவகல்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.
Monday, October 14, 2024
இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் இணைய மோசடிகள்
Monday, September 2, 2024
நேர்காணல்: இணையப் பாதுகாப்பு ஏன் அவசியம்?
தொழில்நுட்ப வளர்ச்சியினால் இன்றைய உலகில் இணையத்தின் ஆதிக்கமே வியாபித்துக் காணப்படுகின்றது. இணையத்தின் ஊடாக பல நன்மையான விடயங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் கூட, அதே அளவிற்கு தீமையான விடயங்களை மேற்கொள்வதற்கும் இணையம் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது. வேலைவாய்ப்புக்கள், கல்வி, தொலைதொடர்பு, தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு, வணிகம் என்று அன்றாடத் தேவைகள் இன்று இணையத்திலேயே தங்கியுள்ளன. அதனால், இணையப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு வழங்க வேண்டியதன் தேவை காணப்படுகின்றது.
எனவே, காலத்தின் தேவைக்கு இந்த விடயங்களை வாசகர்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் இலங்கைப் பாராளுமன்றத்தில் ஊடக அதிகாரியாகக் கடமையாற்றும் நுஸ்கி முக்தார் அவர்களை நேர்காணல் செய்தோம். அதனை கேள்வி பதிலாக தருகின்றோம்.
Thursday, August 15, 2024
உங்கள் வாக்கைத் தீர்மானிக்கும் சமூக ஊடகப் பிரச்சார உத்திகள் மற்றும் கட்டமைப்பு பற்றிய புரிதல் தேவை
இலங்கையின் அடுத்த ஐந்து ஆண்டுகளை ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி எதிர்வரும் செப்டம்பர் 21 என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில் இன்று 15 ஆம் திகதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படுவதற்கு பல மாதங்களுக்கு முன்பிருந்தே வேட்பாளர்கள் தமது பிரச்சார நடவடிக்கைகளை முடக்கி விட்டிருந்தனர். இதில் குறிப்பாக சமூக ஊடகங்களின் மூலம் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் முக்கிய இடத்தை பிடிக்கின்றது. இலங்கையின் சனத்தொகையில் 50% அதிகமானவர்கள் இணையத்தளத்தை பயன்படுத்துவதை தரவுகள் மூலம் காணக்கூடியதாக உள்ளது. அதிலும் விஷேடமாக 34.2 வீதமானவர்கள் சமூக ஊடக பயனர்களாக உள்ளதாக இவ்வருட ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. அந்த அடிப்படையில் சமூக ஊடகங்களின் பயனர்களை இலக்காகக் கொண்ட தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றமை காணக்கூடியதாக உள்ளது.






