Trending Topic

We bring you Articles, Poems, Stories, Inspirational Quotes and Speeches

Monday, September 2, 2024

நேர்காணல்: இணையப் பாதுகாப்பு ஏன் அவசியம்?

தொழில்நுட்ப வளர்ச்சியினால் இன்றைய உலகில் இணையத்தின் ஆதிக்கமே வியாபித்துக் காணப்படுகின்றது. இணையத்தின் ஊடாக பல நன்மையான விடயங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் கூட, அதே அளவிற்கு தீமையான விடயங்களை மேற்கொள்வதற்கும் இணையம் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது. வேலைவாய்ப்புக்கள், கல்வி, தொலைதொடர்பு, தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு, வணிகம் என்று அன்றாடத் தேவைகள் இன்று இணையத்திலேயே தங்கியுள்ளன. அதனால், இணையப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு வழங்க வேண்டியதன் தேவை காணப்படுகின்றது. 

எனவே, காலத்தின் தேவைக்கு இந்த விடயங்களை வாசகர்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் இலங்கைப் பாராளுமன்றத்தில் ஊடக அதிகாரியாகக் கடமையாற்றும் நுஸ்கி முக்தார் அவர்களை நேர்காணல் செய்தோம். அதனை கேள்வி பதிலாக தருகின்றோம்.

Thursday, August 15, 2024

உங்கள் வாக்கைத் தீர்மானிக்கும் சமூக ஊடகப் பிரச்சார உத்திகள் மற்றும் கட்டமைப்பு பற்றிய புரிதல் தேவை

இலங்கையின் அடுத்த ஐந்து ஆண்டுகளை ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி எதிர்வரும் செப்டம்பர் 21 என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில் இன்று 15 ஆம் திகதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படுவதற்கு பல மாதங்களுக்கு முன்பிருந்தே வேட்பாளர்கள் தமது பிரச்சார நடவடிக்கைகளை முடக்கி விட்டிருந்தனர். இதில் குறிப்பாக சமூக ஊடகங்களின் மூலம் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் முக்கிய இடத்தை பிடிக்கின்றது. இலங்கையின் சனத்தொகையில் 50% அதிகமானவர்கள் இணையத்தளத்தை பயன்படுத்துவதை தரவுகள் மூலம் காணக்கூடியதாக உள்ளது. அதிலும் விஷேடமாக 34.2 வீதமானவர்கள் சமூக ஊடக பயனர்களாக உள்ளதாக இவ்வருட ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. அந்த அடிப்படையில் சமூக ஊடகங்களின் பயனர்களை இலக்காகக் கொண்ட தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றமை காணக்கூடியதாக உள்ளது. 

Thursday, July 11, 2024

அதிகரிக்கும் இணையவழி மோசடிகள் - அவதானம் தேவை


குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் நிதி விசாரணைப் பிரிவுக்கு பெண் ஒருவர் அண்மையில் முறைப்பாடொன்றை மேற்கொண்டிருந்தார். அது அறிமுகமில்லாத நபர் ஒருவர் தன்னை வட்ஸப் குழுவொன்றில் இணைத்து, டிக்டொக் வீடியோக்களுக்கு லைக் மற்றும் கமெண்ட் போடுவதன் மூலம் பணம் ஈட்ட முடியும் எனத் தெரிவித்து, பின்னர் அதனை விட அதிக பணம் ஈட்டுவதற்கு முடியும் எனத் தெரிவித்து வங்கிக் கணக்கொன்றுக்கு பணம் வைப்பிலிட்ட சம்பவம் தொடர்பானதாகும். அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து தந்தையும் மகனொருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர்களும் குறித்த நிதி மோசடியில் சிக்கிக்கொண்டு பாதிக்கப்பட்டவர்கள் என்பது மேலதிக விசாரணைகளில் தெரியவந்தது. அதன்படி, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு 200 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் இலங்கையர்களும் வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். அத்துடன்,

Saturday, November 27, 2021

A Hike to Peacock Hill - Monara Gala Mountain | සුන්දර මොනරගල කන්ද



Watch Tip: watch this video with the full brightness of your screen to witness the colour of nature

Sunday, April 19, 2020

கொரோனாக் கொடுமையினால் கொதிக்கும் மாந்தனே!

ஓடி உழைத்தாய்; ஆடித்திரிந்தாய்
ஆணவங் கொண்டாய்
அகிலத்தையே வெல்லப் பார்த்தாய்
அறநெறிகளை மறந்து,
அசிங்கமான வாழ்க்கைக்கு இசைந்தாய்

சதித்திட்டங்களை தீட்டி,
சட்டங்களையே மறந்து விட்டாய்
சமயத்தை தூரமாக்கி,
சாத்தானை நண்பனாக்கி
சாந்தியையே விரட்டியடித்தாய்