அண்மையில்
ஒரு பொலிஸ் அதிகாரியும் அவரது மனைவியும் மதவாச்சி நோக்கி பிரயாணத்தை மேற்கொண்டனர்.
மிரிஹானை பொலிஸ் பணிபுரியும் குறித்த பொலிஸ் அதிகாரி காணி பிரச்சினை ஒன்று தொடர்பிலேயே
மதவாச்சி நோக்கி பயணம் மேற்கொண்டிருந்தார். பயணக் களைப்பு நீங்க இருவரும் மன்னார் வீதியிலுள்ள உணவகமொன்றுக்குள் நுழைந்துள்ளனர். அங்கு
சென்ற அவர்கள் உணவுக்காக மரக்கறி ரொட்டியை கோரியுள்ளனர். அவர்கள் உட்கொண்ட மரக்கறி
ரொட்டியில் மணல் காணப்பட்டுள்ளது. இதனை அடுத்து குறித்த பொலிஸ் அதிகாரி உடனானடியாக
பொது சுகாதார பரிசோதகருக்கு முறைப்பாடு செய்துள்ளார். இது பற்றி கோபமடைந்த உணவக உரிமையாளர்
தனது கையாட்களுடன் இணைந்து பொலிஸ் அதிகரிக்கும் அவரது மனைவிக்கும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
Space for Meaningful Discussions on Everything from Politics to Technology, Social Issues and Youth
Saturday, May 11, 2019
Friday, April 12, 2019
VIDEO: அபாயத்தின் விளிம்பில் தெஹிவளை - கல்கிஸ்ஸை மீனவ சமூகம்
தலைநகருக்கு
மாத்திரம் இரண்டாம் நிலையாக கருதப்படும் சொர்க்கபுரியான ஒரு நகரமாக தெஹிவளை - கல்கிஸ்ஸை
பிரதேசத்தை அழைப்பதில் எவ்வித பிழையும் இல்லை. கடற்கரை என்பது சுந்தரமான ஓர் இயற்கை
அமைப்பாகும். தெஹிவளை கல்கிஸ்ஸை கடற்கரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை
கவர்ந்த அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு சுற்றுலா வலயமாகும். வானுயர்ந்த கட்டிடங்கள், போக்குவரத்துக்கு காலி
வீதி மற்றும் புகையிரத பாதை என தெஹிவளை பிரதேசத்தில் வசிப்பவர்கள் அனைத்தையும் சுலபமாக
பெற்றுக்கொள்ளும் வகையிலேயே தெஹிவளை - கல்கிஸ்ஸை பிரதேசம் காணப்படுகின்றது.
Sunday, February 17, 2019
ஒரு கல்விச் சூரியனின் அஸ்தமனம் – எம்.எஸ்.ஏ வாஹித் அதிபர்
ஹெம்மாதகமை பிரதேசத்தில் அறிவொளி பரப்பிய மேதை எம்.எஸ்.ஏ வாஹித் அதிபர் காலமானார் (15.02.2019). வாஹித் பிரின்ஸிபல் என்று எல்லோராலும் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் அழைக்கப்பட்ட மாமேதையின் மறைவு மாவனல்லை பிரதேசத்திற்கே பேரிழப்பாகும்.ஒரு கல்விச் சூரியனின் அஸ்த்தமனம் – எம்.எஸ்.ஏ வாஹித் அதிபர்
மர்ஹூம் முஹம்மது ஸாலி உம்மு குல்தூம் தம்பதியனருக்கு அரும் புதல்வராக 1925.12.18 ஆம் திகதி ஹெம்மாதகமை தும்புளுவாவை கிராமத்தில் அவதரித்தார்.
Tags
Articles
Wednesday, February 6, 2019
වසර 40ක පොලිස් සේවාවෙන් විශ්රාම ගන්නා ජ්යෙෂ්ඨ නියෝජ්ය පොලිස්පති ලතීෆ් මොහොමඩ්
මධ්යඹ පළාතේ සෙංකඩගල පුරවරයේ එම්.එම්. සබ්රීන් ලතිෆ් මහතාට සහ එස්.ආර්.එස්. ලතිෆ් මහත්මියට 1959 පෙබරවාරි මස 05 වන දින මොහොමඩ් රුවෙයිස් ලතීෆ් නම් පුතකු දායාද විය. අභිමානවත් පොලිස් නිලදරුවකුවූ තම පියතුමන්ගේ රාජකාරි ස්වභාවය මතම කොළඹ නාගරික පරිසරයේ මාපිය තුරුලේ කෙළිදෙලෙන් ගතකල එම්. ආර්. ලතීෆ් පුතණුවන් අධ්යාපන කටයුතු සඳහා ඇතුළත් කරනු ලැබුවේ දිවයිනේ සුප්රකට පාසලක් වූ කොළඹ රාජකීය විද්යාලයටය.
අධ්යාපන කටයුතුවල ඉතා දක්ෂ ලෙස නියැළෙමින් සිටි එම සිසුවා දඟකාරකම් මෙන්ම නායකත්ව ගුණාංගද පෙන්වීය. එම්. ආර්. ලතීෆ් සිසුවා ඔහු තුළ වූ සහජ කුසලතාවයන් හඳුනාගනිමින් රග්බි, හොකී වැනි ජවයෙන් පිරිපුන් ක්රීඩාවන්ද, ක්රිකට් ක්රීඩාවද තෝරාගත් අතර, පාසලේ ශිෂ්ය භට කණ්ඩායමද නියෝජනය කරමින් කොළඹ රාජකීය විද්යාලයට ජයග්රහණ රාශියක් අත්පත් කර දුන්නේය.
Tags
Articles
Wednesday, January 30, 2019
படுபிடியவுக்கு ஒரு சட்ட யாப்பு அவசியமா?
கடந்த வருட இறுதியில் இலங்கையில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடி நிலைமை பற்றி அனைவரும் அறிந்ததே. இதன்போது சர்வாதிகாரமான முறையிலும் மனம்போன போன போக்கிலும் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் எவ்வாறு நீதியின் முன்னிலையில் தூக்கி வீசப்பட்டது என்பதை கண்கூடாக கண்டோம். குறித்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் நீதியை வேண்டி நின்றவர்களுக்கும் சட்டத்தை நிலைநாட்டும் நிறுவங்களுக்கும் உறுதுணையாக காணப்பட்டது இலங்கை ஜனநயாக சோஷலிச குடியரசின் அரசியல் யாப்பு ஒன்று மாத்திரமே. யாப்பு ஒன்று எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்துவதற்கு, எதேச்சாதிகாரம் தோற்கடிக்கப்பட்ட, எமது தலைமுறைக்கு பரீட்சயமான கிட்டிய உதாரணமாக இதனை குறிப்பிடலாம்.
Friday, December 21, 2018
சமூக ஊடகங்கள் வரமா? சாபமா?
சமூக ஊடகங்களின் வருகையானது உலகளாவிய தகவல் பரிமாற்றத்தில் பாரிய மாற்றங்களை கொண்டுவந்ததுடன் தகவல் பரிமாற்ற பொறிமுறையை இலகுபடுத்தியுள்ளது. குறிப்பாக பேஸ்புக், வாட்சப் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் இந்த தகவல் பரிமாற்றத்தில் முக்கிய இடம்பிடிகின்றன. பாரம்பரிய ஊடகங்களும் கூட தற்பொழுது நவீன ஊடகங்களில் தமது கணக்குகளை / பக்கங்களை ஆரம்பித்து அவற்றின் ஊடாக தமது வழமையான வாசகர்களை விட அதிகமான மற்றும் வேறுபட்ட ஒரு தரப்பினருக்கு தமது வெளியீடுகளை சென்றடைய செய்கின்றன.
Tags
Articles,
Technology,
Youth
Friday, December 14, 2018
ஊடக நிறுவனங்கள் அரசியல் மற்றும் வர்த்தக சிந்தனைகளால் கைப்பற்றப்படுவதன் ஆபத்தான விளைவு
ஒக்டோபர் 26ம் திகதி எதிர்பாராத விதமாக இடம்பெற்ற அரசியல் மாற்றத்தை அடுத்து கடந்த சில வாரங்களாக இந்த நாட்டின் அனைத்து அரச ஊடகங்களும், தனியாருக்கு சொந்தமான ஊடகங்களில் பெரும்பாலானவை மிகவும் பக்கசார்பாக தமது அறிக்கையிடல்களை மேற்கொள்வதை நாம் நல்லமுறையில் கண்டோம்.
“தேர்தல் காலம் போன்று அல்லது அதற்கும் மேலாக அரசியல் ரீதியாக தீர்மானம் மிக்க இந்தக் காலத்தில் நாட்டில் அதிகமானோரின் தகவல் மூலமாக காணப்படும் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடகங்களின் பொறுப்புமிக்க செயற்பாடு இல்லாமை பாரதூரமானது.”
Tags
Articles
Subscribe to:
Posts (Atom)



