Trending Topic

We bring you Articles, Poems, Stories, Inspirational Quotes and Speeches
Showing posts with label Politics. Show all posts
Showing posts with label Politics. Show all posts

Wednesday, January 29, 2025

விக்டர் ஐவன் (1949 - 2025) : வரலாறு அவரை எவ்வாறு நினைவு கூரப் போகிறது?

கிட்டத்தட்ட 35 வருட காலமாக இலங்கையின் இதழியல் துறையில் மட்டுமின்றி நாட்டின் அரசியல் சமூகத்திலும் (Polity) ஒரு இராட்சதக் குழந்தையாக (Enfant Terrible) செயற்பட்டு வந்த விக்டர் ஐவன் 2025 ஜனவரி 19 ஆம் தேதி காலமானார். 

கடந்த வாரம் நெடுகிலும் அச்சு, இலத்திரனியல் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பல்வேறு தரப்பினரும் அவருக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார்கள். சிங்களத்திலும், ஆங்கிலத்திலும், அதேபோல தமிழிலும் கணிசமான அளவிலான அஞ்சலிக் குறிப்புக்கள் எழுதப்பட்டிருந்தன. 

(1960 களின் தொடக்கத்தில் இலங்கை கம்யூனிஸ்டு கட்சியின் உத்தியோகபூர்வ நாளிதழாக வெளியிடப்பட்ட) 'அத்த' பத்திரிகையின் ஆரம்பத்துடன் இலங்கையின் அச்சு ஊடகத்துறை ஒரு புதிய யுகத்துக்குள் பிரவேசித்தது. பெரும் ஊடக நிறுவனங்களினால் அப்பொழுது வெளியிடப்பட்டு வந்த 'தினமின', 'லங்காதீப' மற்றும் 'தவஸ' போன்ற சிங்கள நாளிதழ்கள் குறிப்பிட்ட சில வரையறைகளை வகுத்துக் கொண்டு, இயங்கி வந்த ஒரு சூழலில் 'அத்த' பத்திரிகை வேண்டுமென்றே அந்த வரம்புகளை மீறியது.

Wednesday, October 9, 2024

புதியதோர் அரசியல் கலாச்சாரத்தின் தேவைக்கான அறைகூவல்...

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கட்டளைப்படி கடந்த செப்டம்பர் 24 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய ஒன்பதாவது பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. இந்தப் பாராளுமன்றம் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் திகதி ஆரம்பமாகி 2024 செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி நள்ளிரவு வரை 390 நாட்கள் கூடியிருந்தன. ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்து வருட காலம் இன்னும் நிறைவடையவில்லை என்றாலும், அரசியலமைப்பின் 70 ஆம் உறுப்புரையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய பாராளுமன்றத்தைக் கலைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் கூடி இரண்டரை வருடங்களின் பின்னர் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

 
அதற்கமைய பத்தாவது பாராளுமன்றத்துக்கான மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் பொதுத் தேர்தல் எதிர்வரும் நவம்பர்

Thursday, August 15, 2024

உங்கள் வாக்கைத் தீர்மானிக்கும் சமூக ஊடகப் பிரச்சார உத்திகள் மற்றும் கட்டமைப்பு பற்றிய புரிதல் தேவை

இலங்கையின் அடுத்த ஐந்து ஆண்டுகளை ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி எதிர்வரும் செப்டம்பர் 21 என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில் இன்று 15 ஆம் திகதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படுவதற்கு பல மாதங்களுக்கு முன்பிருந்தே வேட்பாளர்கள் தமது பிரச்சார நடவடிக்கைகளை முடக்கி விட்டிருந்தனர். இதில் குறிப்பாக சமூக ஊடகங்களின் மூலம் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் முக்கிய இடத்தை பிடிக்கின்றது. இலங்கையின் சனத்தொகையில் 50% அதிகமானவர்கள் இணையத்தளத்தை பயன்படுத்துவதை தரவுகள் மூலம் காணக்கூடியதாக உள்ளது. அதிலும் விஷேடமாக 34.2 வீதமானவர்கள் சமூக ஊடக பயனர்களாக உள்ளதாக இவ்வருட ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. அந்த அடிப்படையில் சமூக ஊடகங்களின் பயனர்களை இலக்காகக் கொண்ட தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றமை காணக்கூடியதாக உள்ளது. 

Monday, November 2, 2015

Northern Muslims Continue to Rot in Refugee Camps


Ignored by successive governments, their own politicians and international community

by Latheef Farook : 
The unfortunate plight of northern Muslims refugees, abandoned by Muslim politicians, the successive governments and even the international community speak volume for the bankrupt nature of the Island’s Muslim politics and even the community. Muslims were part and parcel of northern soil and society. Over
centuries this was their only place and their Tamil neighbors were the only people they knew. Most of them often felt alien when they visited the island’s south as they found it somewhat uncomfortable there due to the different social environment especially when it came to speaking in Sinhala.
Even around the late 1980s, the bulk of their concentration was in Jaffna city where they lived predominantly in three densely populated areas, namely Sonaka Theru, Ottumadam and Bommaively which were collectively known as Muslim ‘vattaaram’ -zones.
Their main activities were retail and wholesale hardware trade, lorry transport, jewellery and tailoring besides agriculture and fisheries.  They owned houses and properties besides paddy lands and fishery boats.Muslims dominated the trade at one stage to such an extent that two-thirds of the blocks in the new market in Jaffna, built by the Mayor of Jaffna, Alfred Duraiappah, and was monopolized by them.