Trending Topic

We bring you Articles, Poems, Stories, Inspirational Quotes and Speeches

Thursday, May 7, 2026

இலங்கையைச் சூழ்ந்துள்ள சர்வதேச இணைய மோசடிகள்! நமது பாதுகாப்பு நமது கையில்...

இலங்கையில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி எந்தளவுக்கு முன்னேறியுள்ளதோ, அதே அளவுக்கு இணையம் வழி நிகழும் குற்றச் செயல்களும் மிகவும் நுணுக்கமான முறையில் விரிவடைந்துள்ளன. இதற்குச் சான்றாக, அண்மையில் ராஜகிரிய பகுதியில் வெளிநாட்டு பிரஜைகள் சுமார் 120 பேர் இணைய வழி மோசடியில் ஈடுபடும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதை குறிப்பிடலாம். அத்துடன் தலங்கம பகுதியிலும் சீனப் பிரஜைகளால் நடத்தப்பட்ட பாரிய இணைய மோசடி மையம் ஒன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு, 37 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் கடந்த வார இறுதியில் பதிவாகியுள்ளது. இவ்வாறான பாரியளவிலான மோசடி நடவடிக்கைகள் இலங்கையை மையமாகக் கொண்டு இடம் பெறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவை இலங்கை பிரஜைகளை மாத்திரம் இலக்காகக் கொண்டு இயங்கும் தளங்கள் அல்ல, மாறாக இந்த நவீன மோசடி மையங்கள் சர்வதேச ரீதியாகப் பலரை ஏமாற்றுவதைத் தொழிலாகக் கொண்டு இயங்குகின்றன.