Trending Topic

We bring you Articles, Poems, Stories, Inspirational Quotes and Speeches

Wednesday, December 17, 2025

Arabic Language: A Living Heritage Shaping Civilizations - World Arabic Language Day 2025

On the occasion of World Arabic Language Day (December 18), we celebrate an ancient language that, throughout the centuries, has served as a vessel of knowledge and a source of human thought, playing a pivotal role in the transmission of sciences and the building of civilizations. With its expressive richness and structural flexibility, Arabic is not merely a language of history, but a living tool capable of interacting with the changes and demands of our time.

Given its cultural significance, the Arabic language has received increasing attention at official and institutional levels, in recognition of its importance in strengthening cultural identity and fostering a sense of belonging, as well as in supporting education, knowledge, and creativity. In this context, Saudi Arabia's Vision 2030 affirms that the Arabic language is a fundamental element in human development and societal progress, through supporting its presence in education, media, culture, and technology, enhancing Arabic content, and linking the language to cultural and intellectual development projects.

Thursday, December 11, 2025

தித்வா சூறாவளியின் கோரப்பிடியிலிருந்து மீண்டெழும் கெலிஓயா: ஒருங்கிணைக்கப்பட்ட பொறிமுறையாக கெலிஓயா அபிவிருத்தி நிதியம்


தித்வா புயல் 27.11.2025 ஆம் திகதி இலங்கை மீது சீறியபோது, அது வெறும் நீரையும் மண்ணையும் மட்டும் புரட்டிப் போடவில்லை, அது மக்களின் வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டியது. இலங்கையிலேயே கண்டி மாவட்டம்தான் மிக மோசமாகப் பாதிப்புகளைச் சந்தித்தது. கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டபோது, சீறிப் பாய்ந்த வெள்ளம் கெலிஓயா நகரையும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளையும் முற்றிலுமாகச் சிதைத்தது. கடைகளும் வீடுகளும் என அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி, மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.

அனைத்தையும் எடுத்துச் சென்ற தித்வாவுக்கு மனித நேயத்தையும் மன தைரியத்தையும் எடுத்துச் செல்ல முடியாமல் போனது. அந்த வகையில் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான உறுதியும் போராட்டமும் இப்பகுதி மக்களிடையே தற்போது எழுச்சி பெற்று வருகிறது.

Saturday, October 11, 2025

இலங்கை பாராளுமன்றத்தில் 'ஊடக அலுவலர் பதவி (தமிழ்)' வெற்றிடத்துக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

இலங்கை பாராளுமன்றத்தில் 'ஊடக அலுவலர் பதவி (தமிழ்)' வெற்றிடத்துக்கான விண்ணப்பங்கள் தற்பொழுது கோரப்பட்டுள்ளன. 

Wednesday, January 29, 2025

விக்டர் ஐவன் (1949 - 2025) : வரலாறு அவரை எவ்வாறு நினைவு கூரப் போகிறது?

கிட்டத்தட்ட 35 வருட காலமாக இலங்கையின் இதழியல் துறையில் மட்டுமின்றி நாட்டின் அரசியல் சமூகத்திலும் (Polity) ஒரு இராட்சதக் குழந்தையாக (Enfant Terrible) செயற்பட்டு வந்த விக்டர் ஐவன் 2025 ஜனவரி 19 ஆம் தேதி காலமானார். 

கடந்த வாரம் நெடுகிலும் அச்சு, இலத்திரனியல் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பல்வேறு தரப்பினரும் அவருக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார்கள். சிங்களத்திலும், ஆங்கிலத்திலும், அதேபோல தமிழிலும் கணிசமான அளவிலான அஞ்சலிக் குறிப்புக்கள் எழுதப்பட்டிருந்தன. 

(1960 களின் தொடக்கத்தில் இலங்கை கம்யூனிஸ்டு கட்சியின் உத்தியோகபூர்வ நாளிதழாக வெளியிடப்பட்ட) 'அத்த' பத்திரிகையின் ஆரம்பத்துடன் இலங்கையின் அச்சு ஊடகத்துறை ஒரு புதிய யுகத்துக்குள் பிரவேசித்தது. பெரும் ஊடக நிறுவனங்களினால் அப்பொழுது வெளியிடப்பட்டு வந்த 'தினமின', 'லங்காதீப' மற்றும் 'தவஸ' போன்ற சிங்கள நாளிதழ்கள் குறிப்பிட்ட சில வரையறைகளை வகுத்துக் கொண்டு, இயங்கி வந்த ஒரு சூழலில் 'அத்த' பத்திரிகை வேண்டுமென்றே அந்த வரம்புகளை மீறியது.

Monday, October 14, 2024

இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் இணைய மோசடிகள்


இணையத்தளம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 120 சீனப் பிரஜைகள் அடங்கிய குழுவொன்றைக் கடந்த வார இறுதியில் பொலிஸார் கைது செய்தனர். கண்டி, குண்டசாலையில் அமைந்துள்ள 47 அறைகள் கொண்ட சொகுசு பங்களா ஒன்றை சந்தேக நபர்கள் இந்த இணைய மோசடிக்குப் பயன்படுத்தியுள்ளனர். கைது செய்யப்பட்ட சீனப் பிரஜைகளிடம் இருந்த 15 கணினிகள் மற்றும் 300 கைடயக்கத் தொலைபேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. இவ்வாறு இந்த வார ஆரம்பத்தில் ஹங்வெல்ல, நாவல, மற்றும் பாணந்துறை ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 80 வெளிநாட்டுப் பிரஜைகள் இணைய மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே போன்று இதற்கு முன்னரும் நீர்கொழுப்பு

Wednesday, October 9, 2024

புதியதோர் அரசியல் கலாச்சாரத்தின் தேவைக்கான அறைகூவல்...

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கட்டளைப்படி கடந்த செப்டம்பர் 24 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய ஒன்பதாவது பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. இந்தப் பாராளுமன்றம் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் திகதி ஆரம்பமாகி 2024 செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி நள்ளிரவு வரை 390 நாட்கள் கூடியிருந்தன. ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்து வருட காலம் இன்னும் நிறைவடையவில்லை என்றாலும், அரசியலமைப்பின் 70 ஆம் உறுப்புரையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய பாராளுமன்றத்தைக் கலைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் கூடி இரண்டரை வருடங்களின் பின்னர் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

 
அதற்கமைய பத்தாவது பாராளுமன்றத்துக்கான மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் பொதுத் தேர்தல் எதிர்வரும் நவம்பர்

Monday, September 2, 2024

நேர்காணல்: இணையப் பாதுகாப்பு ஏன் அவசியம்?

தொழில்நுட்ப வளர்ச்சியினால் இன்றைய உலகில் இணையத்தின் ஆதிக்கமே வியாபித்துக் காணப்படுகின்றது. இணையத்தின் ஊடாக பல நன்மையான விடயங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் கூட, அதே அளவிற்கு தீமையான விடயங்களை மேற்கொள்வதற்கும் இணையம் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது. வேலைவாய்ப்புக்கள், கல்வி, தொலைதொடர்பு, தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு, வணிகம் என்று அன்றாடத் தேவைகள் இன்று இணையத்திலேயே தங்கியுள்ளன. அதனால், இணையப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு வழங்க வேண்டியதன் தேவை காணப்படுகின்றது. 

எனவே, காலத்தின் தேவைக்கு இந்த விடயங்களை வாசகர்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் இலங்கைப் பாராளுமன்றத்தில் ஊடக அதிகாரியாகக் கடமையாற்றும் நுஸ்கி முக்தார் அவர்களை நேர்காணல் செய்தோம். அதனை கேள்வி பதிலாக தருகின்றோம்.