ஹெம்மாதகமை பிரதேசத்தில் அறிவொளி பரப்பிய மேதை எம்.எஸ்.ஏ வாஹித் அதிபர் காலமானார் (15.02.2019). வாஹித் பிரின்ஸிபல் என்று எல்லோராலும் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் அழைக்கப்பட்ட மாமேதையின் மறைவு மாவனல்லை பிரதேசத்திற்கே பேரிழப்பாகும்.ஒரு கல்விச் சூரியனின் அஸ்த்தமனம் – எம்.எஸ்.ஏ வாஹித் அதிபர்
மர்ஹூம் முஹம்மது ஸாலி உம்மு குல்தூம் தம்பதியனருக்கு அரும் புதல்வராக 1925.12.18 ஆம் திகதி ஹெம்மாதகமை தும்புளுவாவை கிராமத்தில் அவதரித்தார்.