Trending Topic

We bring you Articles, Poems, Stories, Inspirational Quotes and Speeches

Friday, December 21, 2018

சமூக ஊடகங்கள் வரமா? சாபமா?

சமூக ஊடகங்களின் வருகையானது உலகளாவிய தகவல் பரிமாற்றத்தில் பாரிய மாற்றங்களை கொண்டுவந்ததுடன் தகவல் பரிமாற்ற பொறிமுறையை இலகுபடுத்தியுள்ளது. குறிப்பாக பேஸ்புக், வாட்சப் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் இந்த தகவல் பரிமாற்றத்தில் முக்கிய இடம்பிடிகின்றன. பாரம்பரிய ஊடகங்களும் கூட தற்பொழுது நவீன ஊடகங்களில் தமது கணக்குகளை / பக்கங்களை ஆரம்பித்து அவற்றின் ஊடாக தமது வழமையான வாசகர்களை விட அதிகமான மற்றும் வேறுபட்ட ஒரு தரப்பினருக்கு தமது வெளியீடுகளை சென்றடைய செய்கின்றன.

Friday, December 14, 2018

ஊடக நிறுவனங்கள் அரசியல் மற்றும் வர்த்தக சிந்தனைகளால் கைப்பற்றப்படுவதன் ஆபத்தான விளைவு

ஒக்டோபர் 26ம் திகதி எதிர்பாராத விதமாக இடம்பெற்ற அரசியல் மாற்றத்தை அடுத்து கடந்த சில வாரங்களாக இந்த நாட்டின் அனைத்து அரச ஊடகங்களும், தனியாருக்கு சொந்தமான ஊடகங்களில் பெரும்பாலானவை மிகவும் பக்கசார்பாக தமது அறிக்கையிடல்களை மேற்கொள்வதை நாம் நல்லமுறையில் கண்டோம்.

“தேர்தல் காலம் போன்று அல்லது அதற்கும் மேலாக அரசியல் ரீதியாக தீர்மானம் மிக்க இந்தக் காலத்தில் நாட்டில் அதிகமானோரின் தகவல் மூலமாக காணப்படும் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடகங்களின் பொறுப்புமிக்க செயற்பாடு இல்லாமை பாரதூரமானது.”

Friday, December 7, 2018

போதைப்பொருள் ஒரு பொது எதிரி



தினசரி பத்திரிகையை புரட்டும் போதோ அல்லது தொலைக்காட்சியை திருப்பும் போதோ அடிக்கடி கேட்கும் ஒரு செய்தியாக போதைப்பொருள் விவகாரத்துடன் தொடர்புபட்ட விடயங்களை இன்று சுட்டிக்காட்ட முடியும். முன்பு நகர்ப் புறங்களில் மாத்திரம் காணப்பட்ட இந்த போதைப்பொருள் பாவனை தற்பொழுது குக்கிராமங்களுக்கும் வியாபித்துள்ளமை ஆச்சரியமான ஒரு விடயமாகும். சில வேளைகளில் மிகவும் பின்தங்கிய கிராமங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வந்தடைவதில் தாமதமேற்பட்டாலும் போதைப்பொருள் வந்தடைந்திருக்கும். சமய மற்றும் சமூக விழுமியங்களைப் பேணிவந்த ஊர்களும் இந்த போதைப்பொருள் தொல்லையால் பல சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றன.

Friday, August 3, 2018

அல்மனாரை அதிரவைத்த வளத்தாப்பிட்டி கோர விபத்து

கடந்த 28.07.2018 சனியன்று மாலை கிடைத்த விபத்து செய்தியொன்று என்னை அதிரவைத்தது என்று தான் கூற வேண்டும். அது ஹந்தஸ்ஸ அல்-மனார் தேசிய பாடசாலை ஆசிரியை ஷியானா மற்றும் அவரது கணவர் மொஹம்மத் லாபிரின் மரணச்செய்தியாகும். சம்மாந்துறை வளத்தாப்பிட்டி எனும் இடத்தில் இடம்பெற்ற கோர விபத்து இவர்களது உயிரைப் பலியெடுத்தது. மணல் ஏற்றிவந்த கனரக லொறியொன்றுடன் இவர்கள் பயணித்த வேன் நேருக்கு நேர் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் இருவரும் இவ்வுலகை விட்டு பிரிந்து சென்றனர். விபத்தின் கோர தாண்டவத்தை சமூக வலைத்தளங்களில் வந்த படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் மூலம்கண்டுகொள்ள முடிந்தது. இந்த செய்தியை கேட்டு நான் மட்டுமல்ல முழு அல் மனார் சமூகமுமே கதி கலங்கிப் போயிருந்தன.

Wednesday, May 16, 2018

Anadolu Agency's Diplomacy Journalism Training Begins

Participants from 15 different countries take part in training in Turkish capital



Anadolu Agency has begun its diplomacy journalism training program for participants from Balkans, Southeast Asia and Southeast Africa regions.

The two-week program for the participants from 15 countries was launched Monday in capital Ankara in collaboration with the Turkish Cooperation and Coordination Agency (TIKA) and Anadolu Agency's News Academy.


The training program aims to establish a network with other correspondents, to inform participants on issues of diplomatic relations between countries of the region and Turkey's regional policy approach and to allow participants to compare diplomacy journalism in their country with other countries.

The training program began with the presentation of News Academy Deputy Coordinator Hayri Cetinkus on Anadolu Agency.

"We have different programs under the title of 'diplomacy journalism'; however, these programs are different from each other in terms of content. The needs of target are determined according to which country they are participating from... Thus we obtain efficiency in the programs," he said.

Friday, January 19, 2018

மறைந்தும் மறவாத மர்ஹும் செய்யித் மீராஸ் அதிபர் அவர்கள்

ஹந்தஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலையின் 125 வருட கால வரலாற்றில் 24 வது  அதிபராக சேவை செய்து ஓய்வு பெற்ற அதிபர்  அல்ஹாஜ் ஸெய்யித் மீராஸ் (இலங்கை அதிபர் சேவை 1)அவர்கள் 2017.10.31 ஆம் திகதியன்று (செவ்வாய்க்கிழமை) இறையடி சேர்ந்தார். (இன்னாலில்லாஹ்.....)



வாழ்க்கைச் சுருக்கம்
மறைந்த மர்ஹும் செய்யித் மீராஸ் அவர்கள் ஊவா மாகாணத்தில் வெளிமட பிரதேசத்தில் போகஹகும்புர எனும் கிராமத்தில் மீராபிள்ளை, ஸைதூன் பீபீ ஆகியோருக்கு 1955.12.05ம் திகதி குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்தார். அவருக்கு 7 சகோதரர்களும் 2 சகோதரிகளும் உடன் பிறப்புகளாகக் காணப்படுவதோடு இரு ஆண் பிள்ளைகளுக்கு தந்தையாகவும் காணப்படுகிறார்.