Trending Topic

We bring you Articles, Poems, Stories, Inspirational Quotes and Speeches

Wednesday, February 6, 2019

වසර 40ක පොලිස් සේවාවෙන් විශ්‍රාම ගන්නා ජ්‍යෙෂ්ඨ නියෝජ්‍ය පොලිස්පති ලතීෆ් මොහොමඩ්

මධ්‍යඹ පළාතේ සෙංකඩගල පුරවරයේ එම්.එම්. සබ්රීන් ලති‍ෆ් මහතාට සහ එස්.ආර්.එස්. ලතිෆ් මහත්මියට 1959 පෙබරවාරි මස 05 වන දින මොහොමඩ් රුවෙයිස් ලතීෆ් නම් පුතකු දායාද විය. අභිමානවත් පොලිස් නිලදරුවකුවූ තම පියතුමන්ගේ රාජකාරි ස්වභාවය මතම කොළඹ නාගරික පරිසරයේ මාපිය තුරුලේ කෙළිදෙලෙන් ගතකල එම්. ආර්. ලතීෆ් පුතණුවන් අධ්‍යාපන කටයුතු සඳහා ඇතුළත් කරනු ලැබුවේ දිවයිනේ සුප්‍රකට පාසලක් වූ කොළඹ රාජකීය විද්‍යාලයටය.
අධ්‍යාපන කටයුතුවල ඉතා දක්ෂ ලෙස නියැළෙමින් සිටි එම සිසුවා දඟකාරකම් මෙන්ම නායකත්ව ගුණාංගද පෙන්වීය. එම්. ආර්. ලතීෆ් සිසුවා ඔහු තුළ වූ සහජ කුසලතාවයන් හඳුනාගනිමින් රග්බි, හොකී වැනි ජවයෙන් පිරිපුන් ක්‍රීඩාවන්ද, ක්‍රිකට් ක්‍රීඩාවද තෝරාගත් අතර, පාසලේ ශිෂ්‍ය භට කණ්ඩායමද නියෝජනය කරමින් කොළඹ රාජකීය විද්‍යාලයට ජයග්‍රහණ රාශියක් අත්පත් කර දුන්නේය.

Wednesday, January 30, 2019

படுபிடியவுக்கு ஒரு சட்ட யாப்பு அவசியமா?


கடந்த வருட இறுதியில் இலங்கையில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடி நிலைமை பற்றி அனைவரும் அறிந்ததே. இதன்போது சர்வாதிகாரமான முறையிலும் மனம்போன போன போக்கிலும் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் எவ்வாறு நீதியின் முன்னிலையில் தூக்கி வீசப்பட்டது என்பதை கண்கூடாக கண்டோம். குறித்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் நீதியை வேண்டி நின்றவர்களுக்கும் சட்டத்தை நிலைநாட்டும் நிறுவங்களுக்கும் உறுதுணையாக காணப்பட்டது இலங்கை ஜனநயாக சோஷலிச குடியரசின் அரசியல் யாப்பு ஒன்று மாத்திரமே. யாப்பு ஒன்று எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்துவதற்கு, எதேச்சாதிகாரம் தோற்கடிக்கப்பட்ட, எமது தலைமுறைக்கு பரீட்சயமான கிட்டிய உதாரணமாக இதனை குறிப்பிடலாம். 

Friday, December 21, 2018

சமூக ஊடகங்கள் வரமா? சாபமா?

சமூக ஊடகங்களின் வருகையானது உலகளாவிய தகவல் பரிமாற்றத்தில் பாரிய மாற்றங்களை கொண்டுவந்ததுடன் தகவல் பரிமாற்ற பொறிமுறையை இலகுபடுத்தியுள்ளது. குறிப்பாக பேஸ்புக், வாட்சப் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் இந்த தகவல் பரிமாற்றத்தில் முக்கிய இடம்பிடிகின்றன. பாரம்பரிய ஊடகங்களும் கூட தற்பொழுது நவீன ஊடகங்களில் தமது கணக்குகளை / பக்கங்களை ஆரம்பித்து அவற்றின் ஊடாக தமது வழமையான வாசகர்களை விட அதிகமான மற்றும் வேறுபட்ட ஒரு தரப்பினருக்கு தமது வெளியீடுகளை சென்றடைய செய்கின்றன.

Friday, December 14, 2018

ஊடக நிறுவனங்கள் அரசியல் மற்றும் வர்த்தக சிந்தனைகளால் கைப்பற்றப்படுவதன் ஆபத்தான விளைவு

ஒக்டோபர் 26ம் திகதி எதிர்பாராத விதமாக இடம்பெற்ற அரசியல் மாற்றத்தை அடுத்து கடந்த சில வாரங்களாக இந்த நாட்டின் அனைத்து அரச ஊடகங்களும், தனியாருக்கு சொந்தமான ஊடகங்களில் பெரும்பாலானவை மிகவும் பக்கசார்பாக தமது அறிக்கையிடல்களை மேற்கொள்வதை நாம் நல்லமுறையில் கண்டோம்.

“தேர்தல் காலம் போன்று அல்லது அதற்கும் மேலாக அரசியல் ரீதியாக தீர்மானம் மிக்க இந்தக் காலத்தில் நாட்டில் அதிகமானோரின் தகவல் மூலமாக காணப்படும் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடகங்களின் பொறுப்புமிக்க செயற்பாடு இல்லாமை பாரதூரமானது.”

Friday, December 7, 2018

போதைப்பொருள் ஒரு பொது எதிரி



தினசரி பத்திரிகையை புரட்டும் போதோ அல்லது தொலைக்காட்சியை திருப்பும் போதோ அடிக்கடி கேட்கும் ஒரு செய்தியாக போதைப்பொருள் விவகாரத்துடன் தொடர்புபட்ட விடயங்களை இன்று சுட்டிக்காட்ட முடியும். முன்பு நகர்ப் புறங்களில் மாத்திரம் காணப்பட்ட இந்த போதைப்பொருள் பாவனை தற்பொழுது குக்கிராமங்களுக்கும் வியாபித்துள்ளமை ஆச்சரியமான ஒரு விடயமாகும். சில வேளைகளில் மிகவும் பின்தங்கிய கிராமங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வந்தடைவதில் தாமதமேற்பட்டாலும் போதைப்பொருள் வந்தடைந்திருக்கும். சமய மற்றும் சமூக விழுமியங்களைப் பேணிவந்த ஊர்களும் இந்த போதைப்பொருள் தொல்லையால் பல சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றன.

Friday, August 3, 2018

அல்மனாரை அதிரவைத்த வளத்தாப்பிட்டி கோர விபத்து

கடந்த 28.07.2018 சனியன்று மாலை கிடைத்த விபத்து செய்தியொன்று என்னை அதிரவைத்தது என்று தான் கூற வேண்டும். அது ஹந்தஸ்ஸ அல்-மனார் தேசிய பாடசாலை ஆசிரியை ஷியானா மற்றும் அவரது கணவர் மொஹம்மத் லாபிரின் மரணச்செய்தியாகும். சம்மாந்துறை வளத்தாப்பிட்டி எனும் இடத்தில் இடம்பெற்ற கோர விபத்து இவர்களது உயிரைப் பலியெடுத்தது. மணல் ஏற்றிவந்த கனரக லொறியொன்றுடன் இவர்கள் பயணித்த வேன் நேருக்கு நேர் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் இருவரும் இவ்வுலகை விட்டு பிரிந்து சென்றனர். விபத்தின் கோர தாண்டவத்தை சமூக வலைத்தளங்களில் வந்த படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் மூலம்கண்டுகொள்ள முடிந்தது. இந்த செய்தியை கேட்டு நான் மட்டுமல்ல முழு அல் மனார் சமூகமுமே கதி கலங்கிப் போயிருந்தன.