குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் நிதி விசாரணைப் பிரிவுக்கு பெண் ஒருவர் அண்மையில் முறைப்பாடொன்றை மேற்கொண்டிருந்தார். அது அறிமுகமில்லாத நபர் ஒருவர் தன்னை வட்ஸப் குழுவொன்றில் இணைத்து, டிக்டொக் வீடியோக்களுக்கு லைக் மற்றும் கமெண்ட் போடுவதன் மூலம் பணம் ஈட்ட முடியும் எனத் தெரிவித்து, பின்னர் அதனை விட அதிக பணம் ஈட்டுவதற்கு முடியும் எனத் தெரிவித்து வங்கிக் கணக்கொன்றுக்கு பணம் வைப்பிலிட்ட சம்பவம் தொடர்பானதாகும். அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து தந்தையும் மகனொருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர்களும் குறித்த நிதி மோசடியில் சிக்கிக்கொண்டு பாதிக்கப்பட்டவர்கள் என்பது மேலதிக விசாரணைகளில் தெரியவந்தது. அதன்படி, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு 200 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் இலங்கையர்களும் வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். அத்துடன்,