COVID 19 என்றால் என்ன?
COVID 19 என அழைக்கப்படும் ஒரு வகையான வைரஸ் நோயை கண்டு உலகமே அதிர்ந்து போயுள்ளது. உயிரைக் கொள்ளும் இந்த கொரோனா தொற்று நோய் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவிலிருந்து ஆரம்பித்து இன்று சுமார் 180 ற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இன்றைய நாள் (26.03.2020) புள்ளிவிபரங்களின் படி உலகம் பூராகவும் இந்நோயினால் 462, 684 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் அத்துடன் 20, 834 இற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர் (உலக சுகாதார நிறுவனம்). இந்நிலைமை மேலும் மோசமடையக் கூடும் என சில கணிப்புகளும் எதிர்வுகூறல்களும் குறிப்பிடுகின்றன. இந்நோயின் தீவிரத்தையும் அது உலகளாவியரீதியல் மிக விரைவாகப் பரவுவதையும் கண்ட உலக நாடுகள் தமது நாடுகளில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி வருகின்றன. ஏனெனில் இந்நோய்கான தடுப்பு மருந்துகள் இது வரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவே வரும் முன் காப்பதே இதற்கான சிறந்தவொரு கட்டுப்பாட்டு வழிமுறை என அண்மைய அனுபவங்கள் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன.
COVID 19 என அழைக்கப்படும் ஒரு வகையான வைரஸ் நோயை கண்டு உலகமே அதிர்ந்து போயுள்ளது. உயிரைக் கொள்ளும் இந்த கொரோனா தொற்று நோய் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவிலிருந்து ஆரம்பித்து இன்று சுமார் 180 ற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இன்றைய நாள் (26.03.2020) புள்ளிவிபரங்களின் படி உலகம் பூராகவும் இந்நோயினால் 462, 684 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் அத்துடன் 20, 834 இற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர் (உலக சுகாதார நிறுவனம்). இந்நிலைமை மேலும் மோசமடையக் கூடும் என சில கணிப்புகளும் எதிர்வுகூறல்களும் குறிப்பிடுகின்றன. இந்நோயின் தீவிரத்தையும் அது உலகளாவியரீதியல் மிக விரைவாகப் பரவுவதையும் கண்ட உலக நாடுகள் தமது நாடுகளில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி வருகின்றன. ஏனெனில் இந்நோய்கான தடுப்பு மருந்துகள் இது வரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவே வரும் முன் காப்பதே இதற்கான சிறந்தவொரு கட்டுப்பாட்டு வழிமுறை என அண்மைய அனுபவங்கள் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன.