தலைநகருக்கு
மாத்திரம் இரண்டாம் நிலையாக கருதப்படும் சொர்க்கபுரியான ஒரு நகரமாக தெஹிவளை - கல்கிஸ்ஸை
பிரதேசத்தை அழைப்பதில் எவ்வித பிழையும் இல்லை. கடற்கரை என்பது சுந்தரமான ஓர் இயற்கை
அமைப்பாகும். தெஹிவளை கல்கிஸ்ஸை கடற்கரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை
கவர்ந்த அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு சுற்றுலா வலயமாகும். வானுயர்ந்த கட்டிடங்கள், போக்குவரத்துக்கு காலி
வீதி மற்றும் புகையிரத பாதை என தெஹிவளை பிரதேசத்தில் வசிப்பவர்கள் அனைத்தையும் சுலபமாக
பெற்றுக்கொள்ளும் வகையிலேயே தெஹிவளை - கல்கிஸ்ஸை பிரதேசம் காணப்படுகின்றது.