கடந்த வருட இறுதியில் இலங்கையில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடி நிலைமை பற்றி அனைவரும் அறிந்ததே. இதன்போது சர்வாதிகாரமான முறையிலும் மனம்போன போன போக்கிலும் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் எவ்வாறு நீதியின் முன்னிலையில் தூக்கி வீசப்பட்டது என்பதை கண்கூடாக கண்டோம். குறித்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் நீதியை வேண்டி நின்றவர்களுக்கும் சட்டத்தை நிலைநாட்டும் நிறுவங்களுக்கும் உறுதுணையாக காணப்பட்டது இலங்கை ஜனநயாக சோஷலிச குடியரசின் அரசியல் யாப்பு ஒன்று மாத்திரமே. யாப்பு ஒன்று எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்துவதற்கு, எதேச்சாதிகாரம் தோற்கடிக்கப்பட்ட, எமது தலைமுறைக்கு பரீட்சயமான கிட்டிய உதாரணமாக இதனை குறிப்பிடலாம்.