சமூக ஊடகங்களின் வருகையானது உலகளாவிய தகவல் பரிமாற்றத்தில் பாரிய மாற்றங்களை கொண்டுவந்ததுடன் தகவல் பரிமாற்ற பொறிமுறையை இலகுபடுத்தியுள்ளது. குறிப்பாக பேஸ்புக், வாட்சப் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் இந்த தகவல் பரிமாற்றத்தில் முக்கிய இடம்பிடிகின்றன. பாரம்பரிய ஊடகங்களும் கூட தற்பொழுது நவீன ஊடகங்களில் தமது கணக்குகளை / பக்கங்களை ஆரம்பித்து அவற்றின் ஊடாக தமது வழமையான வாசகர்களை விட அதிகமான மற்றும் வேறுபட்ட ஒரு தரப்பினருக்கு தமது வெளியீடுகளை சென்றடைய செய்கின்றன.
Space for Meaningful Discussions on Everything from Politics to Technology, Social Issues and Youth
Friday, December 21, 2018
Friday, December 14, 2018
ஊடக நிறுவனங்கள் அரசியல் மற்றும் வர்த்தக சிந்தனைகளால் கைப்பற்றப்படுவதன் ஆபத்தான விளைவு
ஒக்டோபர் 26ம் திகதி எதிர்பாராத விதமாக இடம்பெற்ற அரசியல் மாற்றத்தை அடுத்து கடந்த சில வாரங்களாக இந்த நாட்டின் அனைத்து அரச ஊடகங்களும், தனியாருக்கு சொந்தமான ஊடகங்களில் பெரும்பாலானவை மிகவும் பக்கசார்பாக தமது அறிக்கையிடல்களை மேற்கொள்வதை நாம் நல்லமுறையில் கண்டோம்.
“தேர்தல் காலம் போன்று அல்லது அதற்கும் மேலாக அரசியல் ரீதியாக தீர்மானம் மிக்க இந்தக் காலத்தில் நாட்டில் அதிகமானோரின் தகவல் மூலமாக காணப்படும் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடகங்களின் பொறுப்புமிக்க செயற்பாடு இல்லாமை பாரதூரமானது.”
Friday, December 7, 2018
போதைப்பொருள் ஒரு பொது எதிரி
தினசரி
பத்திரிகையை புரட்டும் போதோ அல்லது தொலைக்காட்சியை திருப்பும் போதோ அடிக்கடி கேட்கும்
ஒரு செய்தியாக போதைப்பொருள் விவகாரத்துடன் தொடர்புபட்ட விடயங்களை இன்று சுட்டிக்காட்ட
முடியும். முன்பு நகர்ப் புறங்களில் மாத்திரம் காணப்பட்ட இந்த போதைப்பொருள் பாவனை தற்பொழுது
குக்கிராமங்களுக்கும் வியாபித்துள்ளமை ஆச்சரியமான ஒரு விடயமாகும். சில வேளைகளில் மிகவும்
பின்தங்கிய கிராமங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வந்தடைவதில் தாமதமேற்பட்டாலும் போதைப்பொருள்
வந்தடைந்திருக்கும். சமய மற்றும் சமூக விழுமியங்களைப் பேணிவந்த ஊர்களும் இந்த போதைப்பொருள்
தொல்லையால் பல சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றன.
Subscribe to:
Posts (Atom)