Trending Topic

We bring you Articles, Poems, Stories, Inspirational Quotes and Speeches

Friday, January 19, 2018

மறைந்தும் மறவாத மர்ஹும் செய்யித் மீராஸ் அதிபர் அவர்கள்

ஹந்தஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலையின் 125 வருட கால வரலாற்றில் 24 வது  அதிபராக சேவை செய்து ஓய்வு பெற்ற அதிபர்  அல்ஹாஜ் ஸெய்யித் மீராஸ் (இலங்கை அதிபர் சேவை 1)அவர்கள் 2017.10.31 ஆம் திகதியன்று (செவ்வாய்க்கிழமை) இறையடி சேர்ந்தார். (இன்னாலில்லாஹ்.....)



வாழ்க்கைச் சுருக்கம்
மறைந்த மர்ஹும் செய்யித் மீராஸ் அவர்கள் ஊவா மாகாணத்தில் வெளிமட பிரதேசத்தில் போகஹகும்புர எனும் கிராமத்தில் மீராபிள்ளை, ஸைதூன் பீபீ ஆகியோருக்கு 1955.12.05ம் திகதி குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்தார். அவருக்கு 7 சகோதரர்களும் 2 சகோதரிகளும் உடன் பிறப்புகளாகக் காணப்படுவதோடு இரு ஆண் பிள்ளைகளுக்கு தந்தையாகவும் காணப்படுகிறார்.