தித்வா புயல் 27.11.2025 ஆம் திகதி இலங்கை மீது சீறியபோது, அது வெறும் நீரையும் மண்ணையும் மட்டும் புரட்டிப் போடவில்லை, அது மக்களின் வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டியது. இலங்கையிலேயே கண்டி மாவட்டம்தான் மிக மோசமாகப் பாதிப்புகளைச் சந்தித்தது. கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டபோது, சீறிப் பாய்ந்த வெள்ளம் கெலிஓயா நகரையும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளையும் முற்றிலுமாகச் சிதைத்தது. கடைகளும் வீடுகளும் என அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி, மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.
அனைத்தையும் எடுத்துச் சென்ற தித்வாவுக்கு மனித நேயத்தையும் மன தைரியத்தையும் எடுத்துச் செல்ல முடியாமல் போனது. அந்த வகையில் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான உறுதியும் போராட்டமும் இப்பகுதி மக்களிடையே தற்போது எழுச்சி பெற்று வருகிறது.


