Trending Topic

We bring you Articles, Poems, Stories, Inspirational Quotes and Speeches

Monday, September 2, 2024

நேர்காணல்: இணையப் பாதுகாப்பு ஏன் அவசியம்?

தொழில்நுட்ப வளர்ச்சியினால் இன்றைய உலகில் இணையத்தின் ஆதிக்கமே வியாபித்துக் காணப்படுகின்றது. இணையத்தின் ஊடாக பல நன்மையான விடயங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் கூட, அதே அளவிற்கு தீமையான விடயங்களை மேற்கொள்வதற்கும் இணையம் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது. வேலைவாய்ப்புக்கள், கல்வி, தொலைதொடர்பு, தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு, வணிகம் என்று அன்றாடத் தேவைகள் இன்று இணையத்திலேயே தங்கியுள்ளன. அதனால், இணையப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு வழங்க வேண்டியதன் தேவை காணப்படுகின்றது. 

எனவே, காலத்தின் தேவைக்கு இந்த விடயங்களை வாசகர்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் இலங்கைப் பாராளுமன்றத்தில் ஊடக அதிகாரியாகக் கடமையாற்றும் நுஸ்கி முக்தார் அவர்களை நேர்காணல் செய்தோம். அதனை கேள்வி பதிலாக தருகின்றோம்.