Trending Topic

We bring you Articles, Poems, Stories, Inspirational Quotes and Speeches

Thursday, August 15, 2024

உங்கள் வாக்கைத் தீர்மானிக்கும் சமூக ஊடகப் பிரச்சார உத்திகள் மற்றும் கட்டமைப்பு பற்றிய புரிதல் தேவை

இலங்கையின் அடுத்த ஐந்து ஆண்டுகளை ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி எதிர்வரும் செப்டம்பர் 21 என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில் இன்று 15 ஆம் திகதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படுவதற்கு பல மாதங்களுக்கு முன்பிருந்தே வேட்பாளர்கள் தமது பிரச்சார நடவடிக்கைகளை முடக்கி விட்டிருந்தனர். இதில் குறிப்பாக சமூக ஊடகங்களின் மூலம் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் முக்கிய இடத்தை பிடிக்கின்றது. இலங்கையின் சனத்தொகையில் 50% அதிகமானவர்கள் இணையத்தளத்தை பயன்படுத்துவதை தரவுகள் மூலம் காணக்கூடியதாக உள்ளது. அதிலும் விஷேடமாக 34.2 வீதமானவர்கள் சமூக ஊடக பயனர்களாக உள்ளதாக இவ்வருட ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. அந்த அடிப்படையில் சமூக ஊடகங்களின் பயனர்களை இலக்காகக் கொண்ட தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றமை காணக்கூடியதாக உள்ளது.